இராஜபாளையத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கலசலிங்க பல்கலை.,யில் தோட்டக்கலை பயிலும் இறுதியாண்டு மாணவிகள், விவசாயிகளை சந்தித்து நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி, மகசூல் அதிகரிக்க தேவையான வழிகள் மற்றும் பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு தெரிவித்தனர். இதில் துறை தலைவர் செல்வராணி கலந்து கொண்டார்.