விருதுநகர்,ஜன.,26- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது, வேளாண் சட்டத்திற்கு எதி ராக போராடி உயிர்நீத்த 715 விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பொருட்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும். மின்துறையை தனியாரி டம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்த அகில இந்திய அளவிலான ஐக்கிய முன்னணி சார்பாக அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக தமிழ கம் முழுவதும் டிராக்டர் பேரணி நடை பெற்றது. விருதுநகர் கருமாதிமடம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்ற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வி.முருகன் தலைமையேற்றார். சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் வி.பாலமுருகன், வாழும் விவசாயிகள் சங்க மாநிலத் தலை வர் டி.எஸ்.காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து ஏஐடியுசி மீன வரணி செலாளர் சின்னத்தம்பி பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் கே.சுப்பாராஜ், சிபிஐ ஒன்றிய செயலாளர் சக்கணன், சிபிஎம் நகர் செயலா ளர் எல்.முருகன் ஆகியோர் பேசினர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மனோஜ் குமார், ஏ.குமராண்டி, ரெங்கநாதன், பெரு மாள்ராஜ், காமாட்சிநாதன், மங்கை யர்க்கரசி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் குமரன் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து புறப்பட்ட பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.பெருமாள் தலைமை வகித்தார். பெரியார் சிலை முன்பாக நிறைவுற்றது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி. பெருமாள், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ். நிக்கோ லஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்டச்செயலாளர் எம். சுப்பையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி, விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத்தலை வர் பி.வசந்தாமணி, சிபிஎம் மாவட்டச்செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், இந்திய தேசிய காங்கிரஸ் திண்டுக்கல் மாநகர் மாவட்டத் தலைவர் மணிகண்டன், மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் கார்த்தி, சமூக ஆர்வலர் காஜாமைதீன், உள்ளிட்ட பலர் பேசினர்.
தேனி
தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.கண்ணன் தலைமையில் பேரணி நடைபெற்றது.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.ராஜப்பன், விவசாயி கள் விடுதலை முன்னணி மாவட்டச் செய லாளர் செல்வராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், சிபிஐ விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலர் திரு மலைக்கொழுந்து, பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சந்தனம் தலைமையில் டிராக்டர் பேரணி நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.விஜயமுருகன், மாவட்டத் தலைவர் ஏ. வேல்பாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோ வன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச் சாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன், சிபிஐ புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல், கரும்பு விவசாயிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி, வி.சி.க.மாநில துணைச் செயலாளர் தென்னரசு, சிபிஐ.எம்.எல் விவசாய அணி மாவட்டச் செயலாளர் சண்முகம், புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன் ஆகியோர் மற்றும் பலர் பங்கேற்றனர்.