districts

img

விவசாயிகளுக்கு பாதகமான நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப்பெறுக!

சிவகங்கை, ஜூலை 1-  விவசாயிகளுக்கு பாதகத்தை ஏற் படுத்தும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக அனைத்து  விவசாயிகளிடமும் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இந்த கையெழுத்துக்களுடன் கூடிய மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்  பும் வகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்  தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்  கப்பட்டது. அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஆட்சியர் உறுதியளித்தார். சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், கீழ நெட்டூர் ஊராட்சி மன்றத் முன்னாள் தலை வர் அய்யாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பெரியார் கால்வாயை சீரமைக்காததால் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழப்பூங்குடி கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. கடந்த  20 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்துப் போகிற நிலைமையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. 20அடி நீளத்திற்கு பட்டா இடம் என்பதால் கால்வாய் உருவாக்க முடியவில்லை என  கூறுவது எப்படி நியாயமாகும்? என விஸ்வ நாதன் பேசினார். தற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை எடுக்கி றோம் என்றனர். விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை ஒன்றிய செயலாளர்  முத்துகருப்பன் பேசுகையில், சிவகங்கை  ஊராட்சி ஒன்றியம் சக்கந்தி ஊராட்சியில் சக்  கந்தி, மானாகுடி, பாசாங்கரை ஆகிய கிரா மங்களுக்கான கால்வாய் தூர்ந்துபோய் இருப்பதால் கண்மாய்க்கு பெரியாற்றுத் தண்ணீர் வராமல் விவசாயம் வறண்டு கிடக்கி றது. சிவகங்கை மாவட்டத்தில் மின்  இணைப்பு கொடுப்பதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்து ஆறுமாதம் ஆகி விட்டது. இதுகுறித்து கேட்டால் மின் உபகர ணங்கள் வரவில்லை என கூறப்படுகிறது என்று அய்யாசாமி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மின் வாரிய அதிகாரிகள், விரை வில் உபகரணங்கள் வந்து விடும் என்ற னர்.  காளையார்கோயில் தாலுகா சாத்தணி கிராமத்தில் 25 விவசாயிகளுக்கு பனங்காடி குரூப்பில் 22.08.1970 ல் நில ஒப்படைப்பு செய்தனர். இந்த நிலங்களிலிருந்து இவர் களை வெளியேற்ற சில அதிகாரிகள் முயற்  சிப்பதை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும்  என்று மெய்யப்பன் பேசினார்.