திண்டுக்கல், ஜூலை 17- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மல்லிகைப்பூ செடிகளில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த தரமான பூச்சி மருந்து கடை திறக்கக்கோரி மல்லி கைப் பூ செடிகளுடன் தோட்டக்கலை இணை இயக்குநரை விவசாயிகள் முற்று கையிட்டனர். பூச்சிக்கொல்லி மருந்துகளால் இந்த ஆண்டு பூ விவசாயம் முற்றிலும் பாதித்த தாக கூறி தோட்டக்கலைத்துறை துணை இயக்குநரை முற்றுகையிட்டு விவசாயி கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் முருகத்தூரன்பட்டி, சுக்கன் செட்டிபட்டி, கந்தக்கோட்டை, சிங்கம்பட்டி பகுதிகளில் பிரதானமாக மல்லிகைப் பூ விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த மல்லிகைப்பூ செடிகளில் பலன் தரும் சமயத்தில் தற்போது கடுமையான நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக ஏற்பட்டுள்ள இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த இயலவில்லை. இப்பகுதியில் தரமான பூச்சி மருந்து கிடைக்கவில்லை போலியான பூச்சி மருந்துகள் இருப்பதால் மல்லிகைப்பூ செடிகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியவில்லை. எனவே அரசு சார்பாக உரம் பூச்சிமருந்து கடைகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திங்களன்று தோட்டக்கலைத்துறை இயக்குநர் அலு வலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். எங்கள் பகுதியில் தர மான கம்பெனிகளின் பெயரில் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்கப்படு கின்றன. இதனால் பூச்சி மருந்துகள் வேலை செய்யவில்லை. இதன் காரண மாக மேலும் நோய் தாக்குதலால் பாதிக் கப்படுகின்றன. எனவே அரசு சார்பாக பூச்சிக்கொல்லி மருந்துக்கடை அமைக்க வேண்டும். பூ விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.