தேனி, ஜுன் 17- தென்னை விவசாயிகளை பாதுகாக்க கேரள மாநிலத்தைப் போல் உரித்த தேங் காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று பெரியகுளத்தில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட கோரிக்கை சிறப்பு பேரவை வலி யுறுத்தியுள்ளது. பேரவைக்கு மாநிலக்குழு உறுப்பினர் எம்.வி.முருகன் தலைமை வகித்தார்.எம். மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாநி லச் செயலாளர் ஏ.விஜயமுருகன் சிறப்புரை யாற்றினார். விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டச்செய லாளர் டி.கண்ணன்,மாவட்டத் தலை வர் எஸ்.கே.பாண்டியன், மாவட்ட பொருளா ளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேரவையில், உரித்த காய் கிலோவிற்கு ரூ.50, கொப்பரை கிலோவிற்கு ரூ.140 என விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், தேங் காய் எண்ணெய்யை அரசே கொள்முதல் செய்து ரேசன் கடைகள் மூலம் விநியோ கம் செய்ய வேண்டும்.முழு மானியத்தில் இடு பொருட்கள் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக அம்ச ராஜ், மாவட்டச் செயலாளராக எம்.வி.முரு கன், பொருளாளராக ஆர்.சுப்பையா, மாவட்ட உதவி தலைவர்களாக எம்.மணி கண்டன், பி.வீரு,உதவி செயலாளர்களாக செல்வராஜ்,மூர்த்தி உள்ளிட்ட 20 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.