districts

img

காவலர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

திருவில்லிபுத்தூர், செப்.2- திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் ஷூட்டிங் ரேஞ்ச்சில் காவலர் முதல் ஆய்வாளர் வரை சுமார் 150 பேர் வாராந்திர கவாத்து பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சிக்கு வந்திருந்த காவலர்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. முகாமை கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் அசோகன் துவக்கி வைத்தார்.  திருவில்லிபுத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் தலைமை வகித்தார். திருவில்லி புத்தூர் வட்ட ஆய்வாளர் சங்கர் கண்ணன், கிருஷ்ணன்  கோவில் வட்ட ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.