districts

img

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் படுகாயம்

விருதுநகர், மார்ச்.3- விருதுநகர் அருகே உள்ள கோட்டூரில் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட  வெடி விபத்தில் 3 பெண் தொழி லாளர்கள் படுகாயமடைந்தனர். விருதுநகர் அருகே உள்ளது கோட்டூர் கிராமம். இங்கு  சக்தி வேல் என்பவருக்கு சொந்தமான செந்தூர் பட்டாசு ஆலை உள்ளது. இதை சிவகாசியைச் சேர்ந்த குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 50- க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணி புரிந்து வருகின்ற னர். இந்நிலையில், வியாழக் கிழமை தொழிலாளர்கள் வழக் கம் போல வேலை செய்து கொண்டிருந்தனர்.   பிற்பகல், வெடிக்கான வேதிப்  பொருட்களை கலக்கும் அறை யில் திடீரென உராய்வு ஏற்பட்ட தில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்ட உடன்  ஆலையில் இருந்த  தொழிலாளர் கள் தப்பி ஓடினர். இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர் கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் இரு அறைகள் முற்றி லும் சேதமாகின. இந்த விபத்தில், விருதுநகர் அருகே கூத்திப் பாறை கிராமத்தைச் சேர்ந்த குண வதி, மலைப்பட்டியைச் சேர்ந்த பேபி மற்றும்  வடமலாபுரத்தைச் சேர்ந்த பொண்ணு ஆகியோர்  படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை, சக தொழிலாளர்கள் மீட்டு, விருது நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.  இந்த விபத்து குறித்து விருதுநகர் வச்சக்கா ரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.