சிவகங்கை, ஏப்.27- சிவகங்கை நகர் பழைய மருத்துவமனை அருகே பூட்டப்பட்ட டாஸ்மாக் கடை யை உடனடியாக திறந்து நடத்த வேண்டும் என்று வலி யுறுத்தி மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் முருகன், மாவட்ட தலைவர் திருமாறன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் பாண்டி, சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், உள்பட நூறு பேர் ஈடுபட்டனர். இதுகுறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் சேது ராமன் கூறுகையில், டாஸ் மாக் கடையின் அருகிலே தனியார் மதுபான கடை உள்ளது. இதற்கு மனமகிழ் மன்றம் என்று பெயர். இரண் டும் ஒரே கட்டிடத்தில் உள் ளது. அரசு மதுபான கடை 18 வருட காலமாக இதே பகு தியில் நடைபெற்று வரு கிறது. மனமகிழ் மன்றத்தின் மதுபான கடை மூன்று வருட காலமாக நடைபெற்று வரு கிறது. கடந்த 25.2.2023 அன்று இக்கடை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இதன் காரணமாக இப்பகுதி மக் கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து மனமகிழ் மன்ற டாாஸ்மாக் கடையும், அரசு டாஸ்மாக் கடையும் பூட்டப்பட்டது. பூட் டப்பட்ட கடைகளில் மனம் மகிழ் மன்றத்தின் மதுபான கடை மட்டும் திறக்கப்பட் டது. ஆனால் அரசு டாஸ்மாக் கடை தற்போது வரைக்கும் திறக்கப்படவில்லை. .அரசு இதனை திறப்பது தொடர் பாக மாவட்ட ஆட்சித் தலை வரிடமும் டாஸ்மாக் கோட்ட மேலாளரிடமும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் மனு கொடுத்து பேசினோம். விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.