திண்டுக்கல், ஆக.4- அரசு கரூவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். பணி யிட மாறுதல்கள் கலந்தா ய்வு மூலம் மேற்கொள்ளப் பட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 4 அன்று திண்டுக்கல் மாந கராட்சி, பழனி, கொடைக் கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சிகளில் பணி யாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநக ராட்சியில் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நா. முருகானந்தம் தலைமை யில் இந்த போராட்டம் நடைபெற்றது. (நநி)