districts

img

காலிப்பணியிடங்களை நிரப்புக!

தேனி, செப்.16- தமிழ்நாட்டில் அரசு பணி யில் உள்ள காலிப்பணியிடங்  களை நிரப்ப வேண்டும் என தேனியில் நடைபெற்ற தமிழ்  நாடு அரசு ஊழியர் சங்க பிரதிநிதித்துவ பேரவை வலி யுறுத்தியுள்ளது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் பேயத்தேவன் தலைமை வகித்தார். மாநில  பொதுச்செயலாளர் ஆ. செல்வம், மாவட்ட துணைத்  தலைவர் த.ராமகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் கு.ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர் மொ. ஞானத்தம்பி, மாவட்டச் செயலாளர் ச.தாஜுதீன், மாவட்டப் பொருளாளர் க. முத்துக்குமார் ஆகியோர் பேசினர். சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள், கிராம உத வியாளர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட தொகுப்பு ஊதி யத்தில் பணிபுரியும் அனை வருக்கும் காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.