திண்டுக்கல், மே 21- பெண்கள், குழந்தைகள், மாண விகள் மீதான பாலியல் வன்கொடு மைகளை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட இளம்பெண் கள் மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் திண்டுக்கல் மாவட்ட இளம் பெண்கள் மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் பொன் மதி தலைமை வகித்தார். செயற் குழு உறுப்பினர் கீதா வரவேற் றார். காந்திகிராம பல்கலைகழக பேராசிரியர் பாலசுந்தரி துவக்கி வைத்துப் பேசினார். மாநில பொரு ளாளர் பாரதி நிறைவுரையாற்றி னார். மாவட்ட செயலாளர் கே.ஆர். பாலாஜி நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் கார்த்திகா நன்றி தெரி வித்தார். மாவட்ட தலைவர் சிலம்பர சன் மற்றும் பலர் பங்கேற்றனர். பள்ளி கல்லூரிகளில் மாணவி களுக்கு பாதுகாப்பு குழுக்கள் அமைத்திட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் சம ஊதியம் சம வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.