இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 18 அன்று தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த கோலப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், 11 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் வரைந்த கோலங்களை பார்வையிட்டு அதன் சிறப்பு மற்றும் பயன்கள் குறித்து மகளிர் குழுவிடம் கேட்டறிந்தார்.