districts

img

மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக: மின் ஊழியர் மத்தியமைப்பு ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, அக்.26- பாளையங்கோட்டை மகாராஜா நகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் நாகையன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.  ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்டச் செயலாளர் முருகேசன், நெல்லைத்திட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், கிராமப்புற கோட்டச் செயலாளர் அய்யாதுரை,  மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுவாமிதாஸ், மத்திய அலுவலக செயலாளர்  மந்திரமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் தளபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  சங்கத்தின் திட்டச் செயலாளர் கந்தசாமி மாநில இணைச்செயலாளர் வண்ணமுத்து ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். சங்க மாநிலத் துணைச் செயலாளர் பீர் முகமதுஷா நிறைவுரையாற்றினார். நகர்ப்புற கோட்டத் தலைவர் முத்தையா நன்றி கூறினார். மாநில மின்வாரியங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், இந்திய மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மின்வாரியத்தை பிரிக்க போடப்பட்ட அரசாணையை கைவிட வேண்டும், மின்சார ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.