districts

img

பென்னிகுக் பிறந்த நாளை முன்னிட்டு கூடலூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி ,ஜன.20- முல்லைப்  பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் 182-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூடலூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது .இளம் ஜோடி, புள்ளி மான், தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு ஆகிய 7 பிரிவுகளில் போட்டிகள் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டது.  மந்தை வாய்க்கால் பாலம் முதல் பென்னிகுக் மணிமண்டபம் வரை பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளுக்கும், அதன் உரிமை யாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. போட்டியை காண சாலையில் இரு புறமும் ஏராளமான மக்கள் நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.