திருவனந்தபுரம், மார்ச் 27- சில்வர் லைன் திட்டத்திற்குப் பதிலாக விமான நிலையங்களை தொடர்புபடுத்தி விமான சேவை நடத்தினால் போதும். அப்படியா னால் 15 வருடங்கள் முடியும் போது கேரளா ஏர்லைன்ஸ் தொடங்க முடியும் என்று காங்கிரஸ் தலை வர் கே.முரளீதரன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், கே-ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு பச்சைக்கொடி காட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. திட்டத்தை செயல்படுத்த எக்காரணம் இருந் தாலும் செயல்படுத்த யுடிஎப் அனுமதிக்காது. முதலமைச்சர் விவாதத்திற்கு அழைத்தால் மாற்று அறிவுறுத்தல் வழங் கப்படும். இனி விவாதத்திற்கு அழைக்க வேண்டாம் என்றும் முரளீதரன் கூறினார். காங்கிரஸ் கட்சியில் டிஜிட் டல் முறையிலான உறுப்பினர் விநியோகம் அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதனால் வேகம் குறைந்தது. உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து தேர்தலை சந்திக்க திட்டமிடப் பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க் கையில் நடந்துள்ள மோசடியை தடுக்கும் அமைப்பு ஏற்படுத்தப் படும் என முரளீதரன் செய்தியா ளர் சந்திப்பில் தெரிவித்தார்.