districts

img

நீர் தேர்வு ரத்து கோரி விருதுநகரில் திமுக உண்ணாவிரதம்

விருதுநகர், ஆக.20- பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசானது, உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று விருதுநகரில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.