திண்டுக்கல், செப்.11- திண்டுக்கல் அருகே காலனி வீடுகள் உரிய பராமரிப்பின்றி எலும்புக்கூடுகளாய் காட்சியளிக்கின்றன. அரசு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் அருகேயுள்ளது ராஜாக்கா பட்டி ஊராட்சிக்குட்பட்டது தீத்தாம்பட்டி கிராமம். இந்த பகுதியில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 45 குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு காலனி வீடுகள் கட்டி தரப்பட்டன. இதில் ஒரு வீட்டில் 3 குடும்பங்கள், 4 குடும்பங்கள் என மொத்தம் 120 குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். தற்போது இந்த வீடுகளின் மேற்கூரை கள் இடிந்து வெறும் கம்பிகள் வெளியே தெரியும் எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன. எப்போது இடிந்து விழும் என்ற பயத்திலேயே மக்கள் வாழ்கிறார்கள். இதன் காரணமாக வீட்டின் முன்பு குடிசை அமைத்து வசிக்கிறார்கள். இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் நாகஜோதி, சரஸ்வதி, மலர் ஆகியோர் கூறும் போது, மழை காலங்களில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்துவிடும். சாலை, கழிவு நீர் ஓடை என்ற எந்த வசதியும் இந்த காலனி வீடுகளுக்கு இல்லை. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் பல முறை புகார் கொடுத் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த தொகுப்பு வீடுகளை மரா மத்து செய்ய சட்டமன்ற தொகுதி உறுப்பி னர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அல்லது புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று தெரிவித்தனர். (ந.நி.)