கடமலைக்குண்டு, ஜன.12- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் கட்டப் பட்டுள்ள 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். இந்நிலையில் ஜனவரி 11 புதனன்று எதிர்பாராத விதமாக பள்ளியின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு இடிந்து தலைமை ஆசிரியரின் மேஜை மற்றும் இருக்கை மீது விழுந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் பள்ளிக்குழந்தைகள் அலறியபடி வகுப்பறை கட்டி டத்தை விட்டு வெளியே ஓடினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர்களை அந்த கட்டி டத்தில் இருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஜனவரி 12 வியாழக்கிழமையன்று மாவட்ட திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட செயற் பொறியாளர் முருகன், கடமலை-மயிலை ஒன்றிய ஆணை யர்கள் திருப்பதி முத்து, ஐயப்பன் மற்றும் மந்திச்சுனை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பள்ளி யில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தி புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புதிய கட்டிடம் கட்டும் வரை குழந்தைகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டி டத்தில் அமர வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.