மதுரை, ஜூலை 7- மதுரை அஞ்சல் கோட் டங்களில் முதன்முறையாக தமிழ் மொழி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் விநியோகம் செய்த மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்து தெரி வித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்துக்களை தெரிவித் துள்ளார். ஒன்றிய பாஜக அரசு பல் வேறு துறைகளில் ஹிந்தி மொழியை திணிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் எதிர்த்து,கண்டித்து வருகிறார். வங்கி, தபால் நிலை யங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்று தொடர்ச்சி யாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் மதுரையில் உள்ள 33 அஞ்சல் கோட்டங் களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் முதன் முறையாக தமிழ்மொழியில் அச்சிடப்பட்ட பைகள் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதி விட்டுள்ள மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், மதுரை கோட்ட அஞ் சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் அலுவல் மொழி களான ஆங்கிலம், இந்தி மொழிகளே இதுவரை ஒன்றிய அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சுதந்திரத்துக்குப் பிறகான 75 ஆண்டுகளில் மதுரை அஞ்சலக அதிகாரி யின் முயற்சியால் முதன முறையாக தமிழ் மொழியில் வார்த்தைகள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. இதற் கான முயற்சிகளை மேற் கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துகள்’ என்று தெரி வித்துள்ளார். சு.வெங்கடேசனின் இந்த பதிவுக்கு தமிழ்மொழி ஆர்வலர்கள் வாழ்த்துகளை யும், மகிழ்ச்சியையும் தெரி வித்து வருகின்றனர்.