மதுரை, ஆக.8- சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பழங்கால எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்து சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வுப் பணியின் போது பல்வேறு பழங்கால பொருட்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 9 ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பளபளப்பான மேற்பரப்புடன் கூடிய எடை கல், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகளும் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. இந்த எடைகல் சற்று கோள வடிவில், மேற்பகுதி மற்றும் அடி பகுதி தட்டையாக்கப்பட்டு, பளபளப்பான மேற்பரப்புடன் ஒளிபுகும் தன்மையுடன் காணப்படுகிறது. இக்கல் 2 செ.மீ.விட்டம், 1.5 செ.மீ. உயரம் மற்றும் 8 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த எடை கல்லுடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்பு பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.