districts

குற்றப்பத்திரிகை தாக்கல் இயக்கம்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் முடிவு

காஞ்சிபுரம், அக்.11- மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உப கரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய அரசை  கண்டித்து டிச. 1 அன்று மக்கள் மன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் இயக்கம் நடத்து வது என்று மாற்றுத் திறனாளிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாநிலக்குழு கூட்டம்  சங்கத்தின் மாநிலத் தலைவர் வில்சன் தலை மையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி , பொருளாளர் கே.சி. சக்கரவர்த்தி மற்றும்  நிர்வாகிகள் கலந்துகொண்ட னர். அக்டோபர் 25 உலக உயரம் தடைப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அக். 20  அன்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்கும் இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 3 உலக ஊன முற்றோர் தினத்தையொட்டி ஒன்றிய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு 2016 ஆம்  ஆண்டு ஏற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் உபகரணங்க ளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததை கண்டித்து டிச. 1 அன்று மக்கள் மன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக் கல் செய்யும் இயக்கம் நடத்துவதென்றும் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. கடும் ஊனம் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திற்கு விண்ணப்பம் செய்து ஓராண்டுக்கு மேலாக காத்துக்கிடக்கும் அனைவருக்கும் உடனடி யாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்றும்  தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.