திண்டுக்கல், ஆக.6- திண்டுக்கல்லில் எழுத்தாளர் அம்ஜத் எழுதிய நூல் மற்றும் குறும்படம் வெளி யிடப்பட்டது பொறியியல் பட்டதாரியான அம்ஜத் எழுதிய பிச்சை புகினும் என்ற நூலை மெர்சி பவுண்டேஷன் சார்பாக முனை வர் மெர்சி செந்தில்குமார் நூலை வெளி யிட, முதல் பிரதியை எழுத்தாளர் முருகேச பாண்டியன் பெற்றுக் கொண்டார். திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் .துளிர் நண்பர்கள் அமைப்பின் தலைவர் முகமது யூசுப் அன்சாரி, காஜா மைதீன் எழுத்தாளர் துரைப்பாண்டியன், கவிஞர் இல முருகேசன், நல் நாக ராஜன், முஜி பிரியாணி ஹோட்டல் உரிமை யாளர்கள் பிலால் மற்றும் முஜிபுர் ரஹ்மான் லியோ ஜோ டென்சிங், மாமன்ற சிபிஎம் கவுன்சிலர் கே.எஸ்.கணேசன், திமுக கவுன்சிலர் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து பேசினர். சிவக்குமார் நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்ஜத் இயக்கி நடித்த பேதம் எனும் குறும்படம் வெளி யிடப்பட்டது பிச்சை புகினும் என்ற நூல் கல்வி குறித்த விழிப்புணர்வு குறுநாவலா கும் வேங்கை வயல் பிரச்சனை தொடர் பான குறும்படமாகும்.