திண்டுக்கல், பிப்.7- மாநில டேக்வாண்டோ போட்டியில் 8 வயதிற்கு உட் பட்ட பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டு மொத்த சாம் பியன் பட்டத்தை கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார் பில் மாநில அளவிலான 33 வது டேக்வாண்டோ போட்டி கள் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 8 வயது,17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளின் கீழ் பேட்டிகள் நடைபெறுகிறது. இதில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர் கள் கலந்து கொண்டனர். இதில் 8 வயதிற்குட்பட்ட பிரிவில் ஒட்டுமொத்த சாம்பி யன் பட்டத்தை திண்டுக்கல் மாவட்டம் கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை சேலம் மாவட்டமும், மூன் றாம் இடத்தை தேனி மாவட் டம் வென்றன. பரிசளிப்பு விழா மாவட்ட துணை செய லாளர் நாட்டாமை காஜா மைதீன், மாநிலப் பொதுச் செயலாளர் செல்வமணி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் சங்கர், மூட்டா மனோகரன், மாநிலத் துணைத் தலைவர் மனோகரன், அடியனுக்கு ஊராட்சி தலைவர் ஜீவா னந்தம், டேக்வாண்டோ சங்க மாவட்ட செயலாளர் ஜோதி பாசு அணில் சேமியா சார் பாக கமலஹாசன் வழக்கறி ஞர் சார்வாகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.