திண்டுக்கல், செப்.18- திண்டுக்கல்லில் அக் டோபர் 5-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடை பெறும் பத்தாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை இலக்கி யப் போட்டிகளில் உற்சாக மாக பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்- திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பாக நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 19-ஆம் தேதி மாவட் டத்தின் பல்வேறு இடங்க ளில் கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியின் இறுதிச் சுற்று திங்களன்று பிச்சாண்டி அரங்கில் நடைபெற்றது ஆங்கிலப் பிரிவில் (ஆறாம் வகுப்பு முதல் எட் டாம் வகுப்பு வரை) சிறுமலை புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மஞ்சிகா, ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புப் பிரிவில் அண்ணாமலையார் பெண் கள் மேல்நிலைப்பள்ளி மாணவி முஹமது அபிபா, பதினொன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை யிலான பிரிவில் புனித மரி யன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர் சோக்கின் மில்டன், கல்லூரிப் பிரிவில் காந்தி கிராமம் பல்கலைக்கழ மாணவி தானியா, சூசன் காந்தி ஆகி யோரும் தமிழ் மொழிப்பிரிவில் பேச்சுப்போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பிரி வில் செங்கட்டாம்பட்டி ஊரா ட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி சிவஹரி, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பிரிவில் பாகாநத்தம் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி க. ஷான்வர்சினி 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பிரிவில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிஹர பாண்டியன் கல்லூரிப் பிரி வில் பழனி ஆண்டவர் கலைக் கல்லூரி மாணவர் மோ.நாக அர்ஜுன், ஆகியோரும் முத லிடம் பெற்றனர். பழமொழி கள் ஒப்புவித்தல் தனிநடிப்பு போன்ற போட்டிகளும்பெற் றன. நிகழ்ச்சிகளை இலக்கி யக் களத் தலைவர் பேராசி ரியர் மனோகரன், பொருளா ளர் மணிவண்ணன், நிர்வா கச் செயலாளர் கண்ணன், புலவர் கோவிந்தராஜ், தங் கம், வளர்மதி உள்ளிட்ட நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள ஓவிய ஆசிரியர்கள், தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட னர். ஒருங்கினைப்பாளர் முனைவர் சரவணன் போட்டி களை ஒருங்கிணைத்தார்.