districts

திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை மேம்பாட்டு பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை, டிச.11-  திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை பிரிவில் ரயில் பாதை மேம்  பாட்டு பணிகள் நடைபெற இருக்கி றது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

அதன்படி செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 12, 14, 17, 28, 31  ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயி லாடுதுறை விரைவு ரயில் (16848),   நாகர்கோவிலில் இருந்து டிசம்பர்  12 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16352), குருவாயூரிலிருந்து டிசம் பர் 11, 13, 16, 27, 30 ஆகிய நாட்க ளில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து டிசம் பர் 14, 28 ஆகிய நாட்களில் புறப்  பட வேண்டிய கொல்கத்தா -ஹௌரா விரைவு ரயில் (12666), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 31 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில்  (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி  வழியாக மாற்று பாதையில் இயக்  கப்படும்.

 நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 14, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (16354) திருச்சி வழி யாக இயக்கப்படுவதற்கு பதி லாக திண்டுக்கல், கரூர் வழியாக  மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மயிலாடுதுறையிலிருந்து டிசம் பர் 14 அன்று புறப்பட வேண்டிய  செங்கோட்டை  விரைவு ரயில் (16847),  கச்சக்குடாவிருந்து டிசம்பர் 13  அன்று புறப்பட வேண்டிய நாகர்  கோவில் சிறப்பு ரயில் (07435),  சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 14 அன்று புறப்பட வேண் டிய குருவாயூர் விரைவு ரயில் (16127), பனாரஸிலிருந்து டிசம்பர் 29 அன்று புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) ஆகி யவை திருச்சி, காரைக்குடி, மானா மதுரை, விருதுநகர் வழியாக  மாற்றுப்பாதையில் இயக்கப் படும்.

நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து டிசம்பர் 28, 31 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும்  நாகர்கோவில் பகல் நேர விரைவு  ரயில்கள் (16321/16322) கரூர்,  திருச்சி, காரைக்குடி, மானா மதுரை, விருதுநகர் வழியாக மாற் றுப்பாதையில் இயக்கப்படும்.  சென்னை எழும்பூர் மற்றும் மது ரையிலிருந்து டிசம்பர் 28, 31 ஆகிய  நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை மற்றும் சென்னை எழும்பூர்  தேஜாஸ் விரைவு ரயில்கள் (22671/ 22672) திருச்சி - மதுரை இடையே  பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை மட்டுமே இயக்கப் படும்.

ஈரோட்டில் இருந்து டிசம்பர் 27, 30 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு  ரயில் (16845) மற்றும் செங்கோட் டையில் இருந்து டிசம்பர் 28, 31  ஆகிய நாட்களில் புறப்பட வேண்  டிய ஈரோடு (16846) விரைவு ரயில் ஆகியவை கரூர் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய் யப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.  

மதுரையில் இருந்து டிசம்பர் 12 அன்று காலை 11.55 மணிக்கு  புறப்பட வேண்டிய பிகானிர் விரைவு ரயில் (22631) மதியம் 2  மணிக்கு இரண்டு மணி ஐந்து நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். மதுரையில் இருந்து டிசம்பர் 14, 17 ஆகிய நாட்களில் மதியம் 3 மணிக்கு புறப்பட வேண்  டிய சென்னை எழும்பூர் தேஜாஸ் விரைவு ரயில் (22672) மதியம் 3.30  மணிக்கு 30 நிமிடங்கள் காலதாமத மாக புறப்படும். இந்த தகவலை மதுரை கோட்ட  தென்னக ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.