திருவில்லிபுத்தூர், ஜூலை 20- திருவில்லிபுத்தூர் ஒன்றி யம் பிள்ளையார்குளம் ஊராட்சிக்குட்பட்ட மொட்ட மலை அருகே உள்ள நரிக் குறவர் காலனியில் குடிநீர் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வியாழக்கிழமை அன்று நரிக்குறவர் இன மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் திரு வில்லிபுத்தூர் ஒன்றிய அலு வலகம் முன்பு தர்ணா நடை பெற்றது. தர்ணாவிற்கு லதா தலைமை வகித்தார் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் திருமலை, ஜோதி லட்சுமி, ஒன்றியச் செயலா ளர் சசிகுமார், நகர் செயலா ளர் ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.