மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்குட்பட்ட கோமதிபுரம், மேலமடை, வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் லி.மதுபாலன் சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், உதவி ஆணையாளர்கள் ரெங்கராஜன், வரலெட்சுமி, மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.