இராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் த.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் த.பிரபாகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தோசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.