districts

img

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

குழித்துறை, ஆக. 30- களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  தமிழக பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ச. ரெஜினி தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, பேரூராட்சி தலைவர் ஆ. சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம கல்விக் குழு தலைவர் சுரேஷ்குமார், களியக்காவிளை  பேரூராட்சி வார்டு உறுப்பினர் மு. ரிபாய், பள்ளி ஆசிரியைகள் எஸ்.கே. லேகா, பினிசந்திரா, சமூக ஆர்வலர்கள் ஷாஜகான், மீரான்பிள்ளை, அன்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.  இதில் திருச்சி பரதாலயா கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.