districts

மதுரை முக்கிய செய்திகள்

வனத்துறையை கண்டித்து மலைவாழ்  மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், ஆக.12- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தாணிப்பாறை அடிவாரத்தில் மலைவாழ் மக்கள் வருடம் தோறும் பக்தர்கள் செல்லக்கூடிய வழியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்வது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு வனத்துறை அனுமதி அளிக்காததோடு மலைவாழ் மக்கள் வியாபாரத்திற்கு வாங்கி வைத்திருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது  இந்நிலையில் மலைவாழ் மக்கள் வனத்துறையை கண்டித்தும் கடை வைப்பதற்கு அனுமதி கேட்டும் மலையில் குடியேறும் போராட்டத்தை துவக்கி  நடத்தி வருகின்றனர்.  மலைவாழ் மக்களுக்கு ஆதரவாகவும்  வனத்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் சார்பில் சனிக்கிழமையன்று  வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு  ஜீவா தலைமை தாங்கினார் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன்,  விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் பெனரி மற்றும் ப்ளவக்கல், அத்தி கோயில் மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தோழர் ராமுஅம்மாள் காலமானார் 

மதுரை, ஆக.13-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலூர் தாலுகா  மணப்பட்டி கிளை உறுப்பினர் ராமுஅம்மாள் (வயது  73) அவர்கள் காலமானார்.  அன்னாரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், தாலுகாக்குழு உறுப்பி னர்கள் வீ.அடக்கிவிரணன், ஏ.சிங்காரவேலன், ஆகியோர் உட்பட பலர்  மாலை அனைவித்து அஞ்சலி  செலுத்தினர்.  மறைந்த ராமு அம்மாளின்  கணவர் முத்துராமன் மணபட்டி யின் முன்னாள் கிளைச் செயலாளர் ஆவார்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தேனி, ஆக.12-  பெரியகுளம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் குமார்(48). இவர் தகர செட் அமைக்கும் பணி செய்து வருகிறார் . சம்பவத்தன்று கீழவட கரை ஸ்டேட் பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகர  செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத  விதமாக உயர் அழுத்த மின் வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கி  வீசப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

அலங்காநல்லூர் அருகே அழுகிய  நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு 

மதுரை, ஆக.12- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே  குமாரத்தில்  இருந்து  குலமங்கலம் செல்ல கூடிய சாலையில் மடை கருப்ப சாமி கோவில் அருகே பயன்பாட்டில் இல்லாத தனியார் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் வாய் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில்  25 முதல் 30வயது மதிக்கத்தக்க இளம் பெண் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக அலங்காநல்லூர் தீயணைப்புத் துறை யினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் மற்றும்  காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு  வந்து கிணற்றுக்குள்  கிடந்த சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு  ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வடுகபட்டி கிராம  நிர்வாக அலுவலர் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கீதா மற்றும் காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடமலையில் அரசு ஒப்பந்ததாரர்கள்  பணிகளை நிறுத்தி போராட்டம் 

கடமலைக்குண்டு, ஆக.12- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் சாக்கடை வடி கால், சிமெண்டுரோடு, தடுப்புச்சுவர் உள்  ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த ஒப்பந்த பணி கள் அனைத்தும் வருடத்திற்கு ஒருமுறை அதிகாரிகளால் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு பின்னர் ஒன்றிய நிர்வா கம் மூலம் நிலுவையில் உள்ள வைப்பு  தொகை ஒப்பந்ததாரர்களின் வங்கி  கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப் படும். இந்த வருடம் ஏராளமான பணி கள் முடிவடைந்துள்ள நிலையில் முறை யாக கணக்கு தணிக்கை செய்த பின்பும்  ஒப்பந்ததாரர்களுக்கு வைப்பு தொகை  வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்த டிப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வைப்புத் தொகையை வழங்க சில அதி காரிகள் குறிப்பிட்ட சதவீதம் அடிப்படை யில் கமிஷன் தொகை கேட்கப்படுவதாக வும் ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்த னர். இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் பல முறை ஒன்றிய அதிகாரிகளிடம் வலி யுறுத்தியும் வைப்புத்தொகை வழங்கப்பட வில்லை. கடந்த சில நாட்களுக்கு இந்த  கோரிக்கையை முன்வைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பணிகள்  நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஒன்  றிய ஆணையருக்கு மனு அளிக்கப் பட்டது. இந்நிலையில் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படாததை தொடர்ந்து வெள் ளிக்கிழமை காலை ஒப்பந்ததாரர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை விரைந்து வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை அச்சிட்டு அதனை ஒன்றிய அலுவலக சுவர்களில் ஒட்டினர். மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் அலுவலகங்களுக்கு சென்று வைப்புத் தொகையை வழங்க கோரி  மனு அளித்தனர். ஒப்பந்ததாரர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக  கிராமங்களில் அரசு ஒப்பந்த பணிகள்  அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டுள் ளது. கிராமங்களில் வளர்ச்சி பணிகள்  பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.