districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேனியில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தேனி மதுரை சாலையில் வசிக்கும் எளிய மக்களுக்கு மாற்று இடத்தை உடனே வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேனியில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன்,தாலுகா செயலாளர் இ.தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் டி.நாகராஜ்,டி.ஜெயபாண்டி,தாலுகாக்குழு உறுப்பினர்கள் ஏ.சி.காமுத்துரை, பொன்னுத்துரை மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் மாவட்ட ஆட்சியரிடம் பேசி நல்ல முடிவை சொல்லுகிறேன் என்று தெரிவித்தார்.