திண்டுக்கல், நவ.16- ஆன் லைன் மருந்து விற் பனைக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லில் தமிழ் நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகல்நகரில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின மாவட்டத் தலைவர் மதுக்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச்செயலாளர் கே. பிரபாகரன் துவக்கி வைத் துப் பேசினார். மாநில துணைத் தலைவர் பி.ராம்குமார் விளக்கவுரையாற்றினார். மாவட்டச்செயலாளர் செந்தில்குமார், பொருளா ளர் பாலமுருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கேசவமணி, ராஜ்மோகன், ஆகியோர் பேசினர். கணேஷ்பாபு நன்றி கூறி னார். மேலும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக் கான ஜி.எஸ்.டி. வரி முழு வதையும் நீக்க வேண்டும். அத்தியாவசிய உயிர் காக் கும் மருந்துகளின் விலை யை குறைக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங் களை திருத்தியமைப்பதை கைவிட வேண்டும். முறை யற்ற மருந்து வியாபாரம் செய்யும் மருந்து நிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.