திருநெல்வேலி, டிச .27- சேரன்மகாதேவியில் மாற்றுத்திறனாளிகளுக் கான குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. தமிழ்நாடு அனை த்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் தொடர் முயற்சியால் இந்த முகாம் நடைபெற்றது. துணைஆட்சியர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் கள் வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத் திற னாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் முத்து மணி கண்டன் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை துணை ஆட்சியரிடம் கொடுத்தார். சேரன்மகாதேவி தாலுகா மனநிலை பாதிக் கப்பட்ட வயதான மாற்றுத் திறனாளி களை பராமரிக்க மையம் வேண்டும். 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளி களை புறக்கணிப்பதை தவிர்த்து.அரசு ஆணைப்படி தொடர்ந்து 100நாள் வேலை வழங்க வேண்டும்,பேருந்து நிலையங்களில் மாற்றுத்திற னாளி களுக்கு சிறப்பு கழி வறை கட்டி தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது, மாற்றுத்திற னாளிகள் சங்க வட்டச் செயலாளர் இசக்கி முத்து உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.