districts

மதுரை முக்கிய செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு மாணவர் சங்கம், அனைத்து பள்ளி, கல்லூரிகளில் அமைக்க முடிவு

நாகர்கோவில், அக்.27- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு மாணவர் சங்கம் அமைத்து அவர்கள் மூலமும், ஆசிரியர்கள் மூலமும் போதைப்பொருள் இல்லாத பள்ளி, கல்லூரி வளாகத்தை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை யில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் முன்னிலையில் மாவட்ட அளவிலான போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதனன்று (அக்.26) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துறை அலுவ லர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 240 பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு மாணவர் சங்கம் ஏற்படுத்தப் பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து பள்ளி,  கல்லூரிகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு மாணவர் சங்கம் அமைத்து அவர்கள் மூலமும், ஆசிரியர்கள் மூல மும் போதைப்பொருள் இல்லாத பள்ளி, கல்லூரி வளாகத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் முழு முயற்சியுடன் ஒத்துழைக்க வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு இருந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் 7010363173 என்ற Whatsapp உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

இந்த எண்ணில் தொடர்பு கொள்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். எனவே, பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சமின்றி இந்த எண்ணில் தகவல் அளிக்கலாம். கிராம அளவிலான குழு கூட்ட விவாதத்தில் மைய கருப்பொருளாக போதைப்பொருள் எதிர்ப்பு உதவி எண்ணை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு பொது அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் இந்த உதவி எண்ணை சுவர்களில் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மாதம் ஒரு முறை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கையினை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்கள் ஒவ்வொரு மாத ஆய்வுக்  கூட்டத்திலும்  சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, உசூர் மேலா ளர் (குற்றவியல்) சுப்பிரமணியன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்

தென்காசி, அக் .27 தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண  குழுக் கூட்டம் புதனன்றுதென்காசி மாவட்ட ஆட்சி யரக  கூட்டரங்கில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர்  சு.தமிழ்செல்வி  தலைமை யில் நடைபெற்ற  கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ந.ருக்மணி முன்னிலை வகித்தார். 15-வது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத் தின்கீழ் ரூ.2, 03, 37, 000/-க்கும், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1,04,07,520க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப் பட்டு 5 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.                   கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி  துணைத்தலைவர்  தி.உதயகிருஷ்ணன் உள்பட மாவட்டஊராட்சி உறுப்பினர்கள் , அனைத்து வட்டாரங்களிலிருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 

சிஐடியு 15 ஆவது மாநில மாநாடு கொடி -தியாகிகள் ஜோதிக்குழுக்களின் பயணம் துவங்கியது!

சென்னை,அக்.27- சிஐடியு தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாடு வரும் நவம்பர் 4,5,6 ஆகிய தேதி களில் கன்னியாகுமரியில் நடைபெறு கிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பலமுனைகளிலிருந்து கொடி - தியாகி கள் - தலைவர்கள் ஜோதிகள் என 15  குழுக்கள் அனைத்து மாவட்டங்களி லிருந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு நவம்பர் 3 அன்று கன்னியாகுமரி வந்தடை கிறது. மாநாட்டுக் கொடி காஞ்சிபுரத்தி லிருந்தும், வெண்மணி தியாகிகள் ஜோதி வெண்மணியிலிருந்தும், சின்னி யம்பாளையம் தியாகிகள் ஜோதி,  கோவை மாவட்டம் சின்னியம்பாளை யத்திலிருந்தும், பொன்மலை தியாகிகள் ஜோதி திருச்சியிலிருந்தும், திருமெய்ஞானம் தியாகிகள் ஜோதி மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்தும், புதுவை தியாகிகள் ஜோதி புதுச்சேரியிலிருந்தும், தோழர் லீலாவதி தியாகி ஜோதி மதுரையிலிருந்தும், பி.ராம மூர்த்தி நினைவு ஜோதி மதுரையி லிருந்தும், ஆர்.உமாநாத் நினைவு ஜோதி திருச்சியிலிருந்தும், தோழர் கே.ரமணி நினைவு ஜோதி கோவையிலிருந்தும், தோழர் ஏ.நல்லசிவன் ஜோதி திருநெல் வேலியிலிருந்தும், தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதி சென்னையிலிருந்தும், தோழர் சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி நெல்லிக்குப்பத்திலிருந்தும், தோழர். ஜெ.ஹேமச்சந்திரன் நினைவு ஜோதி நாகர்கோவிலில் இருந்தும் புறப்பட்டு செல்கின்றன. இது தவிர, மாவட்ட அளவில் மறைந்த  தொழிற்சங்க தலைவர்கள் பெயரில் துணை ஜோதி குழுக்கள் புறப்பட்டு கன்னியாகுமரி சென்றடைகின்றன. இந்த  குழுக்கள் அனைத்தும் நான்கு, ஐந்து தினங்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. (மேலும் செய்திகள் 4, 5)