districts

img

வருசநாட்டிலிருந்து சென்னைக்கு தினசரி பேருந்து சேவை

கடமலைக்குண்டு, ஆக.3- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை, திருப்பூர், கோவை  பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். வருசநாட்டில்   இருந்து திருப்பூர் பகுதிக்கு நேரடி அரசு பேருந்து இயங்கி  வருகிறது. இந்த நிலையில் வருசநாட்டில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  மக்களின் கோரிக்கையை ஏற்ற அரசு, வருசநாட்டில் இருந்து சென்னைக்கு தினசரி விரைவு பேருந்து இயக்க  அரசு உத்தரவிட்டது.  இதனையடுத்து வருசநாட்டில் இருந்து 550 கிலோ மீட்டர் தூரமுள்ள சென்னைக்கு அரசு விரைவு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை ஆண்டிப்பட்டி சட்டமன்ற  மகாராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மக்களுடன் அமர்ந்து பய ணம் செய்தார்.  தினமும் மாலை 6 மணிக்கு வருச நாட்டில் இருந்து சென்னைக்கும், தினமும் இரவு 7  மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வருசநாட்டிற்கும் தினசரி பேருந்து சேவை இயக்கப்படும் என்றும், இந்த பேருந்தில் மலைகிராம மக்கள் பயணம் செய்யும் வகையில் வருசநாடு கிரா மத்தில் முன்பதிவு மையம் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.  தொடக்க விழா நிகழ்ச்சியின் போது திமுக கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, கவுன்  சிலர்கள் மச்சக்காளை  உள்ளிட்ட கட்சியினர் உடனி ருந்தனர். வருசநாடு கிராமத்தில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் வருச நாடு சுற்றுவட்டார  மலைகிராம பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.