விருதுநகர், நவ.6- பொதுச் சொத்துகளில் பட்டியலின மக்கள் பங்கை வழங்கிட வேண்டும், பட்டி யல் சாதி துணை திட்டத்தை உறுதி செய்திடவும், சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார் பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலை வர் எம்.முத்துகுமார் தலை மை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினர் உ. வாசுகி கையெழுத்து இயக் கத்தை துவக்கி வைத்தார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.ஊர்காவலன், எஸ்.லட்சுமி, விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை, மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரபாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன், நகரச் செயலா ளர் எல்.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.