சென்னை, ஜன.7- 2023ஆம் ஆண்டிலும் தீண் டாமை கொடுமை நீடிப்பது தடுக் கப்படவேண்டும் என்றும் இதற்கு முடிவு கட்டுவது அவசியம் என்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அறந்தாங்கி அருகே உள்ள மங்கள நாடு என்ற இடத்தில், தேநீர்க் கடை களில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலை யிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் வடை கேட்டபோது, தேநீர்க் கடைக்காரர் கொடுக்க மறுத்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் ‘திரா விட மாடல்’ அரசில் ஒரு துளிக்கூட நடக்க அனுமதிக்கக் கூடாது. தீண் டாமை ஒழிப்பும், ஜாதி ஒழிப்பும் நமது கண்ணான கொள்கை! குற்ற வாளிகள் கடுமையாகத் தண்டிக் கப்படவேண்டும். இவ்வளவுக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முற்போக்குச் சிந்தனை யாளர். தமது வாட்ஸ் அப் எண்ணை யும் விளம்பரப்படுத்தி, பாதிக்கப் பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சொல்லியிருப்பது பாராட்டத் தக்கது. உடனடியாகச் செயலிலும் இறங்குகிறார்! தீண்டாமை சட்டப்படி குற்றம் - மனிதாபிமானத்துக்கும், மனித உரிமைக்கும் எதிரானது என்பது போன்ற விளம்பரங்களை அரசு சார்பில் வெளியிட்டு, இதில் ஒரு புதிய திருப் பத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 2023-லும் தீண்டாமையா? இதனை அனுமதிக்கவே கூடாது. இது வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மட்டு மல்ல, சமூக மாற்றம்பற்றி தீவிரப் பிரச்சாரம் செய்யவேண்டிய பிரச்ச னையும்கூட. திராவிடர் கழகம் இதில் தீவிர முனைப்புக் காட்டும்! 2023 லும் மனிதம் மலர வேண்டாமா? மலம் கலந்த குடிநீரைக் குடிக்கவேண்டுமா? இதற்கொரு முடிவு கட்டியவேண்டியது முக்கியம்! முக்கியம்!! இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.