districts

img

பெரியகுளம் கோட்டாட்சியரகத்தில் சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்

தேனி, ஜூன் 15- தேனி மாவட்டம் வீரபாண்டி யில் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்க வேண் டும். மாற்று சமூகத்திற்கு பத்தி ரப்பதிவு மற்றும் பட்டா வழங்கிய வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி ஜூன் 15 வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பெரியகுளம் கோட்டாட்சி யர் அலுவலக்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  தேனி மாவட்டம்,தேனி தாலுகா வீரபாண்டி கிராமம் ,சர்வே எண்  2021 ,953 ஆகிய பஞ்சமி நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாக மாற்று சமூ கத்தினர் பயன்பாட்டில் உள்ளது.  வீரபாண்டி கிராமம் 914/4, பெரிய குளம் தாலுகா கெங்குவார்பட்டி பிட் -1 கிராமம் சர்வே எண் 432,433 ஆகிய பஞ்சமி நிலங்களுக்கு சட்  டத்திற்கு புறம்பாக பட்டா வழங்  கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலங்களில்  மாற்று சமூகத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து உரிய வர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  இதில் தொடர்புடைய வருவாய்த் துறை, பத்திரப்பதிவுத்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகம்  முன்பு கடந்த வருடம் நவம்பர் 22 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட அதிகாரிகள், 25  நாட்களுக்குள் உரிய நடவடிக்கை  எடுத்து நிலங்களை உரியவர்களி டம் கொடுப்பதாக உறுதியளித்த னர். ஆனால் 8 மாதங்கள் ஆகி யும் பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை

மீண்டும் காத்திருப்பு போராட்டம் 

இந்நிலையில் மீண்டும் ஜூன் 15  வியாழக்கிழமை காலை பெரிய குளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்.வி. முரு கன், தேனி தாலுகா செயலாளர் இ. தர்மர் ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டு உரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் ஏ.வி அண் ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகன், டி. கண்ணன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.இளங்கோவன், டி .ஜெய பாண்டி, டி ,நாகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில் தேனி மாவட் டம் வீரபாண்டியை சேர்ந்த அழ கர்சாமி, சடையாண்டி, பெருமாள் மற்றும் பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டியை சேர்ந்த வேலம்மாள் ஆகியோரின பெயர் களில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி முழக்கம் எழுப்பப்பட்டது.

பஞ்சமி நிலங்களை ஒப்படைக்கும் வரை  போராட்டம்: கே.பாலபாரதி 

போராட்டத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே . பால பாரதி பேசுகையில், பஞ்சமி நிலம்  என்பது நிலமற்ற ஏழை தலித் மக்க ளுக்கு ஆங்கிலேய அரசால் வழங்  கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும். பஞ்சமி நிலங்களை தலித்து களைத் தவிர இதர சமூகத்தினர்  வாங்க முடியாது. ஆனால் முறை கேடுகளை செய்து பெரும்பாலான பகுதி பஞ்சமி நிலங்களை மாற்று  சமூகத்தினர் பயன்படுத்தி வரு கின்றனர். தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய வர்களிடம் ஒப்படைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் தொடர்ந்து பல்வேறு போராட்  டங்கள் நடைபெறும் என தெரி வித்தார். கோட்டாட்சியர் உறுதி  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்களுடன் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சி யர் முத்து மாதவன் பேச்சு வார்த்தை நடத்தினார். 15 நாட்க ளுக்குள் பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித் ததை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.