districts

img

சாலை போட்டதாக பத்திரிகையில் விளம்பரம்

மதுரை, டிச.5- மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றி யம் சத்திரபட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட கல்லங்குத்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பல முறை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், கல்லங்குத்தல் ஊருக்கு செல்லும் சாலை, ஊரில் பேவர் பிளாக் கல் பதித்ததாக கடந்த 14.10.2021 அன்று தினத்தந்தி நாளிதழில் சத்திரப்பட்டி ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் என்று ஒரு பொய்யான விளம்பரம் (செய்தி) வெளி யிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சத்திரபட்டி கிளைச் செய லாளர் வி.கண்ணன், மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.  மனுவை பெற்று கொண்ட அதிகாரி முறைகேடு சம்பந்தமாக ஆய்வு செய்வதாக கூறினார். மேலும் இது சம்பந்தமாக பஞ்சா யத்து அதிகாரிக்கு தகவல் அனுப்பப்படும். அவர் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார்.  மனு அளிக்கும் போது, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பால கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.எஸ்.ஜெயகநாதன், எஸ்.நகாராஜ், மஞ்சம்பட்டி கிளைச் செயலாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.