திருச்சிராப்பள்ளி, டிச.16 - திருச்சி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மரக்கடை, வள்ளுவர் நகர் கிளைகள் சார்பில் வியாழனன்று மரக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், மரக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜீவா நகர், கல்யாண சுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதி மக்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வேண்டும், போதுமான மருத்து வர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், உரிய மருந்துகள், படுக்கை வசதிகளை ஏற்ப டுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி குழு உறுப்பினர் அப்துல் பஷீர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா துவக்கி வைத்தார். மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர், கனகராஜ் ஆகி யோர் விளக்கிப் பேசினர். இதில் விஜய குமார், ஷாஜகான், அண்ணாமலை, கிருஷ்ண மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி மருத்துவ அதிகாரி, சுகாதார ஆய்வாளர், உதவி ஆனையர், காவல் துறை உதவி ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதில் அனைவருக்கும் இங்கு மருத்துவம் பார்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.