districts

img

தடுக்கத் தவறிய பாஜக அரசுகளைக் கண்டித்து சிபிஎம் பேரணி- தெருமுனைக் கூட்டம்

மதுரை, ஆக. 18-  மணிப்பூர், ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும்  கலவரம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு -  1 ஆம் பகுதிக்குழு சார்பில் பேரணி மற்றும் தெருமுனை கண்டன கூட்டம் வெள்ளியன்று கோச்சடை பகுதியில் நடைபெற்றது. பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி லுமும்பா படிப்பகம் அருகில் இருந்து துவங்கிய கண்டன பேரணியை மாவட்டச் செயலாளர் மா. கணேசன் துவக்கி வைத்தார்.  கோச்சடை பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற  தெருமுனை கூட்டத்தி ற்கு கோச்சடை கிளைச் செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி, மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், பகுதிக் குழு செயலாளர் கு. கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. மல்லிகா ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் மதிமுக பகுதி செயலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் ஏ.கே.ஒ நாகராஜ் நன்றி கூறினார்.