districts

img

பேருந்துகளை முறையாக இயக்கக்கோரி மம்சாபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர்,டிச.21- திருவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் வழியாக இராஜபாளையம் செல்லும் அரசு  மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தை யும் முறையாக இயக்க வேண்டும். திரு வில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் செல்லும் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மம்சாபுரம் பேரூராட்சி யில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநி யோகத்தை முறைப்படுத்திட வேண்டும். செண்பகத் தோப்பில் அமைந்துள்ள பேச்சி யம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிட மும் விவசாய பணிகளுக்காக செல்லும் விவ சாயிகளிடமும் வனத்துறை நேரடியாக வசூல் செய்யாமல் சுற்றுச்சூழல் குழு என்  கிற பெயரில் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மம்சாபுரத்தில் செயல் பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தை ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தில் இயங்  கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மம்சாபுரம் பேரூராட்சி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராஜாராம் தலை மை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். திருமலை, ஒன்றிய செயலாளர் சசிகுமார் ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப் பினர் பெருமாள், பேரூராட்சி 4 ஆவது  வார்டு உறுப்பினர் சந்தனமாரி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.