districts

img

பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.15- கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர  கிராம பகுதிகளிலுள்ள பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட தடை விதிக்கும் வனத்துறையை கண்டித்து பத்து காணி சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி, கட்சியின் நிர்வாகிகள் பி.சசி  குமார், எச்.ராஜ தாஸ் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். காணி சமுதாய மக்களின் கைவச நிலங்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும், வன விலங்கு களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.  உள்ளாட்சி தேர்தலுக்காக கடையல் பேரூராட்சியில் வார்டு கள் வரையறை செய்வதில் உள்ள குளறுபடி களை சரிசெய்ய வேண்டும். வட்டப்பாறை அரசு துவக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மறியல் செய்ய முடிவு  செய்யப்பட்டிருந்தது. புதனன்று மார்க்சிஸ்ட்  கட்சி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளித்தனர். அதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது.