districts

img

பஞ்சந்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடமலைக்குண்டு, ஜுலை 30- தேனி மாவட்டம் வருசநாடு கிரா மத்தில் பஞ்சந்தாங்கி கண்மாயில் ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வருசநாடு கிளை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன், கட்சி யின் கடமலை-மயிலை ஒன்றிய செயலா ளர் போஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இ.பாண்டியண், பாரதி, ராஜாராம், புயல் மன்னன், பெருமாள் ஆகியோர் பேசினர்.  பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்  பட்டுள்ள சிங்கராஜபுரம்-அரண்மனை புதூர், வருசநாடு-வாலிப்பாறை ஆகிய  தார் சாலைகளை சீரமைக்க வேண்டும், தேங்காய், கொட்டை முந்திரி, இலவம்  பஞ்சு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியை  தடுக்கும் வகையில் அரசே விவசாயிகளி டமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய  வேண்டும், புலிகள் சரணாலயம் என்ற பெய ரில் கடமலை-மயிலை ஒன்றிய கிரா மங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணி களை தொடர்ந்து தடுத்து வரும் வனத்துறை யை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.