districts

img

மானாமதுரை, தேவகோட்டை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை,நவ.24- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து தர  வேண்டும் என்று வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மானா மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்டச் செயலா ளர் தண்டியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி ,முத்துராமலிங்க பூபதி, சுரேஷ் திருபுவனம்  ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி, சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், இளையான்குடி ஒன்றிய  செயலாளர் ராஜு, மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயராமன் ஆகி யோர் பேசினர். மானா மதுரை அரசு மருத்துவ மனையில் இசிஜி இயந்தி ரம், எக்ஸ்ரே போன்றவை களை நவீனமயமாக்க வேண்டும். மருத்துவ துறை யினருக்கு குடியிருப்பு வசதி வேண்டும். சித்த மருந்தகம் அருகே சாக்கடை கழிவு கள் தேங்குவதை சரி செய்  திட வேண்டும். இங்கு சுத்தி கரிப்புதண்ணீர் இயந்திரம் செயல்படவில்லை. குறை வாக உள்ள  மருத்துவர் எண்ணிக்கையை அதிக ரிக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது.  தேவகோட்டை  தேவகோட்டை அரசு மருத்துவமனையில் போது மான மருத்துவர்கள் ,செவி லியர்கள், ஊழியர்கள், உயிர் காக்கும் மருந்துகளையும் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலூகா செயலாளர் செல் வம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டி யப்பன், மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்  பினர் சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர். தாலு காக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.