நாகர்கோவில், டிச. 1- நாடு முழுவதும் சிறுபான்மையிருக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட மையங்களில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்க ஒன்றிய பாஜக அரசின் வகுப்புவாத அணுகுமுறை காரணமாக உள்ளது. மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக சிறுபான்மை மக்களை தண்டிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. புகார் கொடுப்பவர் மீதே பொய் வழக்கு பதிந்து கைது செய்யப்படுகிறார்கள். இவற்றுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் புதனன்று (டிச.1) கண்டன நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் கே.மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ். அந்தோனி, மாநகர குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திருவட்டார் வட்டாரம் வேர்கிளம்பியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எம். சோபிதராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர். ரவி, ஜி.சகாய ஆன்றனி, வட்டார செயலாளர் ஆர். வில்சன் உள்ளிட்டோர் பேசினர். தோவாளை ஒன்றிய ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எச் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், உஷா பாசி, மாவட்ட குழு உறுப்பினர் மலைவிளை பாசி, வட்டார செயலாளர் மிக்கேல், எஸ். சக்திவேல் உள்ளிட்டோர் பேசினர்.
அருமனை
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முழுக்கோடு ஊராட்சித் தலைவர் சி. மரியசெல்வி விலாசினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அருமனை வட்டாரச் செயலாளர் சி.சசிகுமார், குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவர் ஏ.எம்.வி.டெல்பின் ஆகியோர் உரையாற்றினர். மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் டி. பேபி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.