districts

img

ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மரணம்

மதுரை, அக்.11- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் கர்ப்பிணி பெண்கள் மரணம் குறித்த விசயத்தில்  உரிய நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கட்சி யின் மாவட்டச் செயலாளர்  மா.கணேசன் தலைமையில் மாநிலச் செயற்குழு உறுப்பி னரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன், மாவட்டக் குழு உறுப்பினரும் மாநகராட்சி துணை மேயருமான தி.நாக ராஜன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்  பினர் ஜா.நரசிம்மன் ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் மா. சௌ.சங்கீதாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், ‘‘மதுரை மாவட்டம் மற்றும் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான  ஏழை, எளிய மக்கள் வெளி நோயாளியாகவும், உள் நோயாளியாகவும் சிகிச்சை பெற்று பலனடைந்து வரு கின்றனர். மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனை மகப்பேறு பிரிவில் தினசரி 60-க்கும்  மேற்பட்ட பெண்களுக்கு பிர சவம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனையில் பிரசவத்தின் போது அடுத்தடுத்து 3 கர்ப்  பிணி பெண்கள் உயிரிழந் துள்ளனர் என்ற செய்தி மக்  கள் மத்தியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, கர்ப்பிணி பெண்  கள் மரணம் குறித்த விச யத்தில் முறையாக நீதி விசா ரணை நடைபெற வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழ்  நாடு அரசு உரிய நிவாரணம் வழங்கிட தகுந்த நடவ டிக்கை எடுத்திட வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.