districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத அறிவிப்புக்கு எதிர்ப்பு சிக்கல், ஏர்வாடியில் சிபிஎம் பிரச்சாரம்

இராமநாதபுரம், டிச.1- இராமநாதபுரம் மாவட் டம் சிக்கல், ஏர்வாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரே நாடு,  ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை எதி ர்த்து மக்கள் சந்திப்பு பிரச்  சார இயக்கம் நடைபெற்றது. கடலாடி கிழக்கு தாலு காச் செயலாளர் அம்ஜத் கான் தலைமை வகித்தார். 100 நாள் வேலையில் பதிவு  செய்யப்பட்ட அனைவருக் கும் முழு ஊதியம் வழங்கிட  வேண்டும். பயிர் இன்சூ ரன்ஸ் செய்யப்பட்ட வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி இந்த மக்கள்  சந்திப்பு இயக்கம் நடை பெற்றது.  மாவட்ட செயற்குழு உறு ப்பினர் எம்.சிவாஜி துவக்க உரையாற்றினார். தாலுகா குழு  உறுப்பினர் பச்சம்மாள் நிறைவுரையாற்றினார். தாலுகா குழு உறுப்பினர்கள் ராமசாமி, சுப்பிரமணியன், நம்புராஜன், ஜெயக்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுகா செயலாளர்  முக மது சுல்தான், பி.எம்.வலசை  கிளைச் செயலாளர் முருகே சன், சிக்கல் நகர கிளைச் செயலாளர் சத்யராஜ், கழ நீர்மங்கலம் கிளைச் செய லாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.