கோயம்புத்தூர், மார்ச் 12- காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக பேசிய ஆளுநர் ரவி கோவை வருகையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். உதகையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ஞாயிறன்று கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையம் அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன் தலைமையில் திரண்டனர். கருப்பு கொடியுடன் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். அப்பொழுது, காவல்துறையினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி யினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட செயலா ளர் சி.பத்மநாபன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.அஜய்குமார், யு.கே.சிவஞானம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.கனகராஜ், ஆர்.கோபால், ஆறுச்சாமி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.