இராஜபாளையம், ஜூலை 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் நடத் திய போராட்டத்தால் அய்ய னாபுரத்தில் ஓடை ஆக்கிர மிப்பு அகற்றப்பட்டது. இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் மேல ராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட அய்ய னாபுரம் கிழக்கு தெருவில் கழிவு நீர் செல்லும் ஓடையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய் திருந்தார். இதனால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி, வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. எனவே ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் இரண்டு முறை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஆனால் ஊராட்சி மற் றும் ஒன்றிய நிர்வாகம் நட வடிக்கை எடுக்கிறோம் என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தை கிராம நிர் வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடத்தப்போவதாக அறிவித்தனர்.இதன்பின்னர் இராஜபாளையம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் வரு வாய் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டம் நடத்தினால் கைது செய் வேன் என்று மிரட்டுகிற தொனி யில் வருவாய் கோட்டாட்சி யர் பேசினார்.
இதனால் பேச்சுவார்த்தையில் எந்த வொரு தீர்வும் ஏற்படவில்லை. சிபிஎம் தலைவர்களும் ஊர் பொதுமக்கள் பிரதிநிதி களும் காத்திருப்பு போராட் டத்தை நடத்துவோம் என்று கூறிவிட்டு வந்தனர். இந் நிலையில் ஊராட்சி நிர்வா கம் மற்றும் ஒன்றிய நிர்வா கம், சிபிஎம் தலைவர்களிடம் போராட்டத்திற்கு முன்பே ஆக்கிரமிப்பை அகற்றிவிடு வோம் என்று உறுதியளித்தது. அதன்படி ஜூலை 22 வெள்ளிக்கிழமையன்று காலை போராட்டத்தில் ஈடு படுவதற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் முனியாண்டி, கமிட்டி உறுப்பினர்கள் சஞ் சீவி, நாச்சியார், சோமசுந்த ரம், எம்.கே.பழனிச்சாமி, ஜீவா னந்தம், கிளைச் செயலா ளர் காசிராஜன் மற்றும் மயில் சரஸ்வதி, ஆவுடையாச்சி உட்பட பலர் திரண்டனர். ஆனால் தொடங்குவதற்கு முன்பே ஊராட்சிமன்ற தலைவர் விவேகானந்தன், துணை தலைவர் முத்துராஜ், கீழராஜகுலராமன் காவல் சார்பு ஆய்வாளர் செல்வம் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டது. ஊராட்சி நிர்வாகத் தரப்பில் தற்காலிக மாக ஆக்கிரமிப்பு எடுத்து கழிவுநீர் செல்வதற்கு வழி உருவாக்கப்பட்டுள்ளது ஆனால் நிரந்தரமாக ஓடை யில் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்கு வரும் காலங்க ளில் உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத் தரப்பில் கூறப் பட்டது.ஆக்கிரமிப்பு அகற் றப்பட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.